பெண்ணே
உன் மீது அள்ளி வீசிய அனல் வார்த்தைகளை...
எச்சத்தில் கரைத்து
மென்று முழுங்கி விடு...
விலை இல்லாமல்
திணிக்கப்படும் வீண்பழிகளை..
வெற்று புன்னகையில்
மறைத்து ஒழித்து விடு...
அதிகார வர்க்கத்தால்
அவ மதிக்கப்பட்டாலும்
மரணம் வரும் வரை
மௌனித்து விடு..
ஏனென்றால்
நீ ஒரு தாய்...
உதிரத்தில் உதித்த முத்துக்களுக்காக..
மண் தின்னும் வரை
பெண் வார்த்தைக்குள்
பொறுமையாய் புதைந்து விடு..
2 comments:
Jore Priya keep it up!
Thank you tr
Post a Comment