Saturday, 7 November 2020

என்னவனோடு நான் ..கவிதை

 என்னவனோடு நான்


நீ படிக்கும் புத்தகத்தின் 

காப்பியத் தலைவியும் 

*நானே...*


நீ வரையும் 

ஓவியத்தின்

உயிரோட்டமும்

*நானே* ....


நீ செதுக்கிய 

சிற்பத்தின்

 முழு உருவமும்

 *நானே* ..


நீ மீட்டிய

 வீணையின்

மெல்லிசையும்

 *நானே* ....


உன் பேனாவில்

பிரசவிக்கும்

குழந்தையும் 

 *நானே....* 


உன் கற்பனை கலவிக்கு

கருப்பொருளும்

 *நானே* ..


உன் இளமையை மீட்டெடுக்கும்

நினைவுகளும் 

 *நானே* ...


அத்தனை

 கர்வமடா

 *எனக்கு* ...

    உன்னுடைய அத்தனையும்

 *நானாகி* போனதனால்......

             

     

தமிழுக்குள் நுழைந்து

பிழைகளை கடந்து

கடுந்தவம் புரிந்து

வார்த்தைக்குள் உழன்று

 மெதுவாக எழுந்து..

அண்ணாந்து நிற்கின்றேன்..


    உன் கைப்பிடித்து 

பயணிப்பேன்        

உச்சத்தை அடைய....

              

இப்படிக்கு

என்னவனின்

 மனதிற்குள்

கர்வத்துடன் நான்.

No comments: