என்னவனோடு நான்
நீ படிக்கும் புத்தகத்தின்
காப்பியத் தலைவியும்
*நானே...*
நீ வரையும்
ஓவியத்தின்
உயிரோட்டமும்
*நானே* ....
நீ செதுக்கிய
சிற்பத்தின்
முழு உருவமும்
*நானே* ..
நீ மீட்டிய
வீணையின்
மெல்லிசையும்
*நானே* ....
உன் பேனாவில்
பிரசவிக்கும்
குழந்தையும்
*நானே....*
உன் கற்பனை கலவிக்கு
கருப்பொருளும்
*நானே* ..
உன் இளமையை மீட்டெடுக்கும்
நினைவுகளும்
*நானே* ...
அத்தனை
கர்வமடா
*எனக்கு* ...
உன்னுடைய அத்தனையும்
*நானாகி* போனதனால்......
தமிழுக்குள் நுழைந்து
பிழைகளை கடந்து
கடுந்தவம் புரிந்து
வார்த்தைக்குள் உழன்று
மெதுவாக எழுந்து..
அண்ணாந்து நிற்கின்றேன்..
உன் கைப்பிடித்து
பயணிப்பேன்
உச்சத்தை அடைய....
இப்படிக்கு
என்னவனின்
மனதிற்குள்
கர்வத்துடன் நான்.
No comments:
Post a Comment