Saturday, 7 November 2020

அன்புள்ள அப்பா கவிதை

 அப்பாவின் அழகு

       

அன்புள்ள அப்பா..


உலகமே தெரியாமல் 

உன் உள்ளங்கையை 

பிடித்துக்கொண்டு

 உலாவந்த நாட்களெல்லாம்

இறைவன் தந்த வரம்…


கேட்டதெல்லாம் வேணுமின்னு

 ஒத்தக் காலில் நின்னு கேட்டு அடம்பிடித்த தருணம் எல்லாம்..

வாங்கிக் கொடுத்து 

அழகு பார்க்கும் 

அப்பாவின் மனசு

அழகோ அழகு….


அம்மாவிடம் திட்டு வாங்கி

சாப்பிடாமல் அடம் பிடிக்க...

அம்மாவை திட்டிவிட்டு...

ஊட்டிவிடும் 

அப்பாவின் பாசமோ

அழகோ அழகு..


கல்லூரிப் பேருந்து

 தாமதிக்கும் நிமிடமெல்லாம்..

கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு கால்கடுக்க காத்திருக்கும்

அப்பாவின் பயமோ..

அழகோ அழகு..


மணமகளாய் அலங்கரித்து

தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு மாப்பிள்ளையின் கை பிடித்து

மௌனித்த சில நிமிடம்

அழகோ அழகு…


என் பிள்ளையை பெற்றெடுக்க

பிரசவத்தில் நான் துடிக்க..

பச்சை குழந்தை போல்

 பரிதவித்த  என் அப்பா

அழகோ அழகு…



கதைகள் சொல்லி

 என்னை கண் அயர வைத்தவரே..


தோலில் தூக்கிக்கிட்டு

 தொலைதூரம் நடந்தவரே..


தூளி ஆட்டிகிட்டு

தூங்காமல் நின்றவரே…


தாரைவார்த்த பின்னும்..

நெஞ்சில் சுமந்தவரே..‌.


உங்கள் இளவரசியாய்

வாழ்ந்த இருபது வருடமும்

பொக்கிஷமாய் 

வைத்துப் போற்றப்பட

 வேண்டிய நாட்கள்

                   அப்பா



No comments: